Tuesday, December 14, 2010

ஒரே பாதையில்தான் பயணிக்கிறோம்..
ஒரே திசையில்தான் பயணிக்கிறோம்..
இணைய மாட்டோம்.. என்று தெரிந்தும்
பயணித்து கொண்டே இருக்கிறோம் - இரு தண்டவாளங்கள்

Thursday, July 29, 2010

நீ இல்லாத
இரவுகளில் கூட நான்
இவ்வளவு கண் விழித்தது
இல்லை விழித்துக்கொண்டே  உறங்க கற்றுக்கொள்கிறேன்

Wednesday, July 21, 2010

பாகம்
பாகமாய் முடிவதுதான்
வாழ்க்கை  இது எந்த
பாகம்
பாவத்திற்கான
பரிகாரமா அப்படி என்ன செய்தேன் ...

Thursday, July 8, 2010

ஒரு தூர நோக்கம் இல்லா
முடிவால் என்னில் இருந்து
துரத்தப்பட்டவைகள்  ஏராளம்.....

Tuesday, June 29, 2010

கடவுளை விடவும்
காலத்தை நம்புகிறேன்,
கால பதில்களுக்கான
காத்திருபுக்களில்.......

Wednesday, June 9, 2010

ஆறாவதாய் ஓர் புலன் வேண்டும்
நீ இல்லாமலேயே, இருப்பதாய் -வாழ்வதற்கு

Wednesday, May 19, 2010

உனக்காக
என்னிடம் ஒலிக்கு
மொழி பெயர்க்கப்பட்டாத
மெளனங்கள் நிறையவே

Monday, May 17, 2010

இரவு வந்தால்
இருள் வரும் என்று யார் சொன்னது
இங்கு
இரவு வருகிறது
இருள் தாமதமாக .... தாமதமாக...... தாமதமாகவே ?

Thursday, April 29, 2010

நியூடனின் விதி அது விதியானது
உனக்கும் எனக்கும் எது
விதியோ அதுவே
விதியாகும்

Tuesday, March 30, 2010

இனி நீ
என்னை தேடுவதும்
உன் உடம்பில்
உயிரை தேடுவதும்
ஒன்றுதான்

Tuesday, March 23, 2010

நீ என்னோடு இருந்த வரை
நான் என்னை பற்றி சிந்தித்ததில்லை

Tuesday, March 9, 2010

நான் !
ஒவ்வொரு முறை
விழும் போதும்
உன் படைப்பின் குறைகளையே
உணர்கின்றேன்
உன் படைப்பு
முழுமையாய் இருந்திருந்தால்
நீயே  இங்கு வாழ்ந்திருப்பாய் - இறைவா

Wednesday, March 3, 2010

விண்ணில் இருந்து
வரும் போது ஒன்றாய்த்தான்  வந்தோம்
மண்ணில் விழும்முன் 
இலையில் விழுந்து
இரண்டானோம்
நதியில் காத்திருக்கிறேன்
கடலில் கலக்கும்முன்  ஒன்றாவோம்

Tuesday, February 23, 2010

பக்தர்கள் இல்லாத கோவில்களையே
விரும்புகிறேன்
கடவுளுக்காக அல்ல
அமைதிக்காக‌

Tuesday, February 2, 2010

கனவில் வருவாய் என காத்திருகிறேன் ஆனால் இரவு எனக்கு தூக்கத்தை தர ம(ற)றுக்கிறது.

Monday, January 18, 2010

நீ தரமாட்டாய் என்று தெரிந்தும்
நான் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன்
நீ பேச மாட்டாய் என்று தெரிந்தும்
நான் பேசிக்கொண்டே  இருக்கின்றேன் 
நீ கல் என்று தெரிந்தும்
நான் வணங்கிக்கொண்டே இருக்கின்றேன்
இறைவா நீ கல்லிலும் இருப்பாய் .....
ஓர் இரவில்
ஒற்ரை நிற‌த்துடன்
ஓர் வானவில்
நான் கண் விழிக்கும் வரை
எனக்கு தெரிந்தது