Friday, July 1, 2011

வண்ணத்து பூச்சியை துரத்தும்
குழந்தையின் குதுகலத்தினை 
வண்ணத்து பூச்சி அறிவதில்லை...
சொல்லாத மெளனங்களோடும்
சொன்னாலும் - வளி இருந்தும் ஒலி கடத்தப்பட முடியா தூர இடைவெளிகளோடும் ...
ஆறாம் புலனோடு இல்லாத ஒன்றைத்தேடி
மண்ணை அடையும்முன் உதிர்ந்தும் உயிர் வாழ்கிற பறவையின் சிறகைபோல்
உன்னை துரத்திய குதுகலத்துடன்  இல்லாத ஒன்றை தேடி ....