Monday, December 26, 2011

நிலவை வட்டம் என்றார்கள்
பூமியை சதுரம் என்றவர்கள்
பூமியில் நின்றுகொண்டு
புரிந்து கொண்டேன்
எந்த உண்மைக்கும்
தூரம் அதிகம் -----
ஆசைப்பட்டவைகளும் -எதிர்காலம்
அவஸ்தைப்பட்டவைகளும் - நிகழ்காலம்
அதிகமே!
செமித்தவைகளும் - அவமானம்
சிந்தியவைகளும் - கண்ணீர்
அதிகமே!
நான் விரும்பியவர்கள் எல்லாம் என்னை - பைத்தியம் என்றனர்
என்னை விரும் பியவர்கள் எல்லாம் என்னை - புத்திசாலி என்றனர்
கடவுளை தேடிய போது
நீ தூரத்தில் - என்றார்
நான் விரும்பியது ...
எதிர்காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும்
இடைவெளி இல்லா....
சேமிப்பதற்கும் சிந்துவதற்கும்
இடம் இல்லா...
பைத்தியத்திற்கும் அறிவாளிக்கும்
வேறுபாடு இல்லா..
கடவுளுக்கும் மனிதனுக்கும்
வித்தியாசம் இல்லா.....
"மனிதன் ஆசை"ப்படக்கூடாது - என்று
"புத்தன் ஆசை" ப்பட்டான்
(Mod COP)

Tuesday, December 13, 2011

என் வேண்டுதல்கள் புரிந்து கொள்ளப்படுவதே இல்லை
கடவுள் புரிந்து கொள்ளாத ஒரே மொழி - மெளன மொழி