Monday, December 26, 2011

ஆசைப்பட்டவைகளும் -எதிர்காலம்
அவஸ்தைப்பட்டவைகளும் - நிகழ்காலம்
அதிகமே!
செமித்தவைகளும் - அவமானம்
சிந்தியவைகளும் - கண்ணீர்
அதிகமே!
நான் விரும்பியவர்கள் எல்லாம் என்னை - பைத்தியம் என்றனர்
என்னை விரும் பியவர்கள் எல்லாம் என்னை - புத்திசாலி என்றனர்
கடவுளை தேடிய போது
நீ தூரத்தில் - என்றார்
நான் விரும்பியது ...
எதிர்காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும்
இடைவெளி இல்லா....
சேமிப்பதற்கும் சிந்துவதற்கும்
இடம் இல்லா...
பைத்தியத்திற்கும் அறிவாளிக்கும்
வேறுபாடு இல்லா..
கடவுளுக்கும் மனிதனுக்கும்
வித்தியாசம் இல்லா.....

No comments: